புதன், 5 ஜனவரி, 2011

15. காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே?- ஒரு அலசல்

படம்: பாக்யலக்ஷ்மி
எழுதியவர்: கண்ணதாசன் (வேறு யாராக இருக்க முடியும்?)
இசை: மெல்லிசை மன்னர்கள் (வேறு யாராக இருக்க முடியும்?)

பாக்யலக்ஷ்மி படத்தைப் பற்றிப் பேசுபவர்கள் எல்லோருமே முதலில் குறிப்பிடுவது 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே' பாடலைத்தான். நானும் மாலைப்பொழுதின் மயக்கத்தில் விழுபவன் தான் என்றாலும், என்னை அதிகம் மயக்குவது 'காண வந்த காட்சிதான்.' நான் இப்படிச் சொல்வதற்காக என் ரசனையை யாரேனும் குறை கூறினாலும் பரவாயில்லை!

ஆஹா! என்ன ஒரு காட்சியைப் படைத்திருக்கிறார்கள், கவிஞரும் மெல்லிசை மன்னர்களும்! கம்ப சித்திரம் போல் அல்லவா ஜொலிக்கிறது இவர்கள் தீட்டியுள்ள இசைச்சித்திரம்!

தன் தோழியின் விட்டில் தஞ்சம் புகுந்து அவளை அண்டி வாழும் ஒரு இளம் விதவை, ஒரு நாள் இறந்து விட்டதாகக் கருதப்பட்ட தன் இளவயதுக் கணவனைக் காண்கிறாள். கட்டுக்கடங்காத மகிழ்ச்சியைத் தன் தோழியிடம் பகிர்ந்து கொள்ள நினைத்து ஓடி வருகிறாள். ஆனால் அவள் கண்ட காட்சி என்ன? இவள் கணவன், தோழியின் காதலனாக நிலவொளியில் அமர்ந்திருக்கிறான்!

இந்த அதிர்ச்சியையே தாங்க முடியாத நிலையில், தோழியின் பாடல் இவள் புண்பட்ட மனதைக் கோல் கொண்டு குத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே – நீ
ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே


பல நாள் பட்டினி கிடந்த ஒருவன் ஓரிடத்தில் அறுசுவை உணவு படைத்திருப்பதைக் கண்டு தனக்குத்தான் அது படைக்கப் பட்டிருக்கிறது என்ற மகிழ்ச்சியுடன் ஓடி வர, அவன் உயிர் நண்பன் அந்த உணவுத்தட்டை எடுத்துக்கொண்டதுடன் இல்லாமல், இவன் பட்டினியாய் இருப்பதையும் அறியாமல், மரத்தில் இருக்கும் காக்கையைப் பார்த்து, இது உனக்கு என்று நினைத்தாயா என்று கேலி பேசுவதைக் கேட்கும் நிலை எவ்வளவு சங்கடமானது!

நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகளென்ன
உன் நினைவு மாறி நின்று விட்ட வேதனை என்ன
இங்கு விளையாடும் காதலரைக் காண வந்தாயோ
உன்னை அறியாமல் பார்த்தபடி திகைத்து நின்றாயோ



தோழி பாடுவது என்னவோ நிலவைப் பார்த்துத்தான். ஆனால் பாடல் வரிகள் இவளை அல்லவா தாக்குகின்றன! தன் காதலைப் பார்த்து நிலவு அதிர்ச்சி அடைந்து நின்று விட்டதாகத் தோழி பாடுகிறாள். (நாம் ஓடும்போது நம்முடன் ஓடி வரும் நிலவு, நாம் நின்றால் தானும் நின்று விடும். அவ்வாறு நின்ற நிலவைத்தான் சீண்டும் விதமாகப் பாடுகிறாள் இவள் தோழி.)

பாடலின் ஒவ்வொரு வரியும் இவளுக்கும் பொருந்துகிறது, நிலவுக்கும் பொருந்துகிறது. வெள்ளை உடை அணிந்த இந்த இளம்விதவையும் ஒரு வெள்ளி நிலவுதானே!

காதல் எங்கள் சொந்தம் என்று அறியவில்லையா
கன்னி நெஞ்சம் உனக்கிருந்தும் நாணமில்லையா
உன் மோக நிலை மறந்து விடு வெள்ளி நிலாவே
அந்த மேகத்திலே மறைந்துவிடு வெள்ளி நிலாவே



முதல் சரணம் இவளைக் கேலி செய்வது போல் அமைந்திருக்கிறது என்றால் இரண்டாவது சரணம் சாட்டை அடியாக வந்து விழுகிறது.
காதல் எனக்குத்தான் உரியது, உனக்கு இல்லை. (ஏனெனில் நீ ஒரு விதவை.) உன் மோக நிலயை மறந்து விடு.

'மேகத்திலே மறைந்து விடு' என்பதற்கு, இனி உன் வாழ்வில் இருள் தான் என்று பொருள் கொள்ளலாம். விதவைகள் வெளியே வராமல் வீட்டுக்குள் மறைவாக இருக்க வேண்டும் என்ற நியதிக்கேற்ப நீயும் உள்ளே போய் ஒடுங்கிக்கொள் என்றும் பொருள் கொள்ளலாம்.

இசை பற்றிய நுண்ணறிவு எனக்கு இல்லை என்றாலும், நான் உணர்ந்து அனுபவித்த சில விஷயங்கள்:

ஒரு தோழி காதலின் களிப்பில், மற்றொருத்தி ஏமாற்றத்தின் எல்லையில். இருவர் மன நிலையும் இசையில் பிரதிபலிக்கிறது. பல்லவியில் உற்சாகம், தொடர்ந்து வரும் இணைப்பிசையில், முதலில் வரும் குழல் இசையில் ஏக்கம், பின்பு சித்தாரில் (என்று நினைக்கிறேன்) ஒரு துள்ளல், பிரகு சரணத்திலும் உற்சாகம், தொடரும் ஹம்மிங்கில் பச்சாதாபம் என்று உணர்ச்சிகளை பொம்மலாட்டக் கயிறு கொண்டு இயக்கியிருக்கிறார் மெல்லிசை மன்னர். (மெல்லிசை மன்னர் என்றாலே பன்மைதான், மன்னர்கள் என்று சொல்ல வேன்டியதில்லை, ஆயினும் இவர்கள் பாடல்களைக் கேட்டால் 'கள்' குடித்தது போல் போதை ஏற்படுவதால், மன்னர்'கள்' என்று சொல்கிறோம் என்று வாலி ஒருமுறை கூறினார்!)

'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்' என்பதுபோல், ஒருவர் சிரிக்க, மற்றவர் தவிக்க, இருவர் உணர்ச்சிகளையும் ஒரே பாடலில் காட்டியிருப்பது மெல்லிசை மன்னருக்கு மட்டுமே கை வந்த கலை.

'மாலைப்பொழுதின் மயக்கத்தில்' ஒரு பெண்ணின் துயரம் நேரடியாக வெளிப்பட்டு நம்மை உருக வைக்கிறது. 'காண வந்த காட்சியில்', உற்சாகத்துகுப் பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் துயரம் நம் மனதைப் பிசைகிறது.

இந்தப் பாடலை எப்போது கேட்டாலும், இதன் இசை இன்பத்தை அளித்தாலும், பாடலின் உள்ளிருக்கும் சோகம் எனக்குள் புகுந்து கொண்டு என்னைச் சற்று நேரம் கலங்க வைக்கிறது.

உடனே பாடலைக் கேட்க வேன்டும் என்று தோன்றுகிறதா? இதோ உங்களுகாகக் காத்கிருக்கிறது மெல்லிசை மன்னரின் விருந்து! 

  http://www.raaga.com/player4/?id=26728&mode=100&rand=0.6369598480590672

காண வந்த காட்சி என்ன

14. விஸ்வராமாயணம்

ஆழ்வார்களின் பாசுரங்களிலிருந்து ஆங்காங்கே  வரிகளையும், வார்த்தைகளையும் எடுத்து அவற்றைத் தொகுத்துப் பாசுர ராமாயணம் என்ற பெயரில் செய்யுள் வடிவில் அமைந்த ஒரு சுருக்கமான ராமாயணத்தை உருவாக்கியிருக்கிறார் பெரியவாச்சான் பிள்ளை என்ற வைணவ ஆச்சாரியர்.

அது போல் எம் எஸ் வி இசை அமைத்த திரைப்படப் பாடல் வரிகளிலும் ராமாயணம் முழுவதும் வருகிறது என்பது ஒரு வியப்பான விஷயம்!

ராமாயணத்தில் ஏழு காண்டங்கள் உண்டு. இந்த ஏழு காண்டங்களையும் குறிக்கும் பாடல்கள் எம் எஸ் வியின் பாடல்களில் உண்டு! 

ஏழாவது காண்டமான உத்தர காண்டம் சீதை காட்டுக்கு அனுப்பப்பட்டது, ராமர், சீதை அனைவரும் அவதாரம் முடித்து இவ்வுலகை விட்டு நீங்கியது போன்ற விஷயங்களை விவரிப்பதால், ராமாயணம் சொல்பவர்களும், படிப்பவர்களும் ஆறாவது காண்டமான யுத்த காண்டத்தோடு முடித்துக் கொள்வார்கள். உத்தர காண்டத்தைத் தவிர்த்து விடுவார்கள். ஒருவேளை உத்தர காண்டத்தைப் படித்து விட்டால், மீண்டும் பால காண்டத்தில் ராமாவதாரத்தைப் படிக்க வேண்டும் என்பது ஒரு மரபு.

எம் எஸ் வியின் இசை வீச்சுக்கு உத்தர காண்டமும் தப்பவில்லை. எனவே, உத்தர காண்டத்தில் துவங்கி யுத்த காண்டத்தில் முடிக்கிறேன். 

காட்டில், வால்மீகி ஆசிரமத்தில், லவ குசர்கள் பிறந்து, வால்மீகியிடம் ராமாயணம் கற்று, ராமன்தான் தங்கள் தந்தை என்று அறியாமலே ராமாயணத்தைப் பாடிப் பரப்புகிறார்கள் ('லவ குசா' திரைப்படத்தில், லவ குசர்கள் பாடுவதாக, 'ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே' என்ற அற்புதமான ஒரு பாடல் வருகிறது.  மருதகாசி எழுதிய இந்தப் பாடலுக்கு இசை கே வி மகாதேவன், கண்டசாலா.)

 எனவே, உத்தர காண்டத்தில் ராமாயணம் துவங்கப் படுவதில் தவறில்லை என்று கருதுகிறேன்.

உத்தர காண்டம்: (உத்தரம் என்றால் முடிவு, மறைவு என்று பொருள்.)
(யாரோ சொன்ன அவச்சொல்லைக் கேட்டு, ராமன் சீதையைக் காட்டில் கொண்டு விட்டதையும், சீதை வால்மீகியின் ஆசிரமத்தில் தங்கி லவ குசர்களை ஈன்றதையும், லவ குசர்கள் வால்மிகியிடம் ராமாயணம் பயின்று, ராமகாதையைப் பாடிப் பரப்பியதையும், அஸ்வமேத யாகம் செய்த ராமன், லவ குசர்களுடன் போரிட நேர்ந்து, பின்பு அவர்கள் தன் புதல்வர்கள்தான் என்று அறிந்ததையும், அவர்களுக்கு முடி சூட்டி விட்டுக் கானகம் சென்று, சரயு நதியில் மூழ்கி இவ்வுலகை விட்டு அகன்றதையும், அவ்வாறே ராமனின் மூன்று தம்பிகளும் மறைந்ததையும், பூமி பிளந்து தன் மகளான சீதையைத் தனக்குள் அழைத்துக் கொண்டதையும் உத்தர காண்டம் விவரிக்கிறது.)

ண்ணில் நீர் பெருக சீதை நின்ற நிலை கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் எழுகிறது
அது பாசமன்றோ?

('அம்மம்மா தம்பி என்று நம்பி' - ராஜபார்ட் ரங்கதுரை)

கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
சுவைக் கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகி
மானிடத்தைத் தேடி இன்று போகிறாள்
தன் மணவாளன் கட்டளையால் ஜானகி

தேடி வந்த மாளிகையில் ஆதரவில்லை
அவள் தேர் செல்லும் பாதையில் தெய்வமும் இல்லை
பாவை அவள் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை
தன் பாவம் இல்லை என்று சொல்ல ஒரு வார்த்தையும் இல்லை

ஊமை கண்ட கனவை அவள் யாரிடம் சொல்வாள்
இன்று ஊர் சொல்லும் வார்த்தையில் வேறிடம் செல்வாள்

('கானகத்தைத் தேடி' - கொடி மலர்)

ராமநாமம் தந்த ராகம்
லவனாகக் குசனாக உருவான கீதம்
(மல்லிகை முல்லை - அண்ணன் ஒரு கோயில்)

பால காண்டம்:
(ராம, லட்சுமண, பரத சத்துருக்குனர் பிறப்பு, ராம லட்சுமணர் விஸ்வாமித்திரருடன் கானகம் சென்று முனிவர்களின் யாகத்தைக் காத்தது, மிதிலை சென்று வில்லை முறித்து ராமன் சீதையை மணமுடித்து அயோத்தி திரும்புதல்)

வம்சத்துக்கொருவன் ரகுராமன்

ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி 

('ராமன் எத்தனை ராமனடி? - லக்ஷ்மி கல்யாணம்)


மிதிலா நகரில் ஒரு மன்றம்
பொன் மேனியில் ஜானகி தங்கம்
மணிமாடத்திலே வந்து தோன்றும்
மனம் மன்னவன் எண்ணத்தில் நீந்தும்
ஸ்ரீராமனைக் கண்டது மனமே
பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே

('மதுரா நகரில்' - பார் மகளே பார்)

ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான் 
ராஜாராமன் நினைத்திருந்தான்
அவள் சுயம்வரம் கொள்ள மன்னவர் சிலரும் மிதிலைக்கு வந்திருந்தார் -
மிதிலைக்கு வந்திருந்தார் .

மணிமுத்து மாணிக்க மாடத்தில் இருந்து ஜானகி பார்த்திருந்தாள்
இரு மைவிழி சிவக்க மலரடி கொதிக்க ராமனைத் தேடி நின்றாள்
நாணம் ஒருபுறம் ஆசை ஒருபுறம் கவலை ஒருபுறம்
அவள் நிலைமை திரிபுறம்


கொதிக்கின்ற மூச்சு மாலையில் விழுந்து மணியும் கருகியதே
அவள் கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே

நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை
அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை


முனிவன் முன்புறம் ஸ்ரீராமன் பின்புறம்
சீதை தனியிடம் அவள் சிந்தை அவனிடம்

மன்னவர் எல்லாம் சுயம்வரம் நாடி மண்டபம் வந்து விட்டார்.
ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் ஜானகி கலங்கி விட்டாள்
ஜானகி கலங்கி விட்டாள்.

('ஜனகனின் மகளை' - ரோஜாவின் ராஜா)

சீதைக்கேற்ற ராமனோ?
('ராதைக்கேற்ற கண்ணனோ?' - சுமைதாங்கி)

வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தா
ளோ?

மையிட்ட கண்ணொடு மான் விளையாட
மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ - அங்கே
தேவர்கள் யாவரும் திருமண மேடை அமைப்பதைப் பார்த்திருந்தாரோ திருமால் பிரம்மா சிவன் எனும் மூவர் காவலில் நின்றிருந்தாளோ - தேவி
வைதேகி காத்திருந்தாளோ?


பொன் வண்ணமாலை ஸ்ரீராமன் கையில் மூவரும் கொண்டு தந்தாரோ அங்கே
பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
மங்கையை வாழ்த்த வந்தாரோ தேவி
சீருடன் வந்து சீதனம் தந்து
சீதையை வாழ வைத்தாரோ தேவி

('வசந்தத்தில் ஓர் நாள்' - மூன்று தெய்வங்கள்)

கல்யாணக்கோலம் கொண்ட கல்யாண ராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்

('ராமன் எத்தனை ராமனடி? - லக்ஷ்மி கல்யாணம்)


ஸ்ரீராமன் ஜானகியின் திருமுகத்தைப் பார்த்திருந்தான்
இன்றுவரை  அழியாமல் இதயங்கள் மீதே வாழ்கின்றான் 
 ('ஒருவனுக்கு ஒருத்தி என்று' - தேனும் பாலும்)

அயோத்யா காண்டம்:
(தசரதன் ராமனுக்கு முடி சூட்டத் தீர்மானித்தது, கைகேயியின் பிடிவாதத்தால் ராமன் லட்சுமணன் சீதையுடன் காட்டுக்குச்சென்றது )

தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்

('ராமன் எத்தனை ராமனடி? - லக்ஷ்மி கல்யாணம்)

மந்தரையின் போதனையால் மனம் மாறிக் கைகேயி
மஞ்சள் குங்குமம் இழந்தாள்

('ஒற்றுமையால் வாழ்வதாலே' - பாகப்பிரிவினை)

ராம நாடகத்தில் மூன்று தம்பியரின் உள்ளம் கண்டேனே
('அம்மம்மா தம்பி என்று நம்பி' - ராஜபார்ட் ரங்கதுரை)

மாலை சூடி வாழ்ந்த வேளை
வனவாசம் போனாலும் பிரியாத சீதை

('மல்லிகை முல்லை' - அண்ணன் ஒரு கோவில்) 


மகனைப் பிரிந்து தசரதன் மாண்டான் 
மன்னவன் ராமன் வனம் சென்றான் 
பரதன் கண்ணீர் கமிகையில் நீந்தி
பாதுகையுடனே முடி கொண்டான்.

('இறைவா உனக்கொரு கேள்வி' - அன்னையும் பிதாவும்) 

ஆரண்ய காண்டம்:
(ராமன் சீதை லட்சுமணன் இவர்களின் காட்டு வாழ்க்கை, ராவணன் சீதையை அபகரித்துச் சென்றது)

ஜானகிராமன் காட்டினில் திரிஞ்சான்
பாதியில்தானே சீதையைப்  பிரிஞ்சான்  
('போடச்சொன்னால் போட்டுக்கறேன்' - பூவா தலையா)

கோடு போட்டு நிற்கச் சொன்னால் சீதை நிற்கவில்லையே
சீதை அன்று நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே!

('அடி என்னடி உலகம்' - அவள் ஒரு தொடர்கதை) 

ஆண்மகன் வகுத்த எல்லையைக் கடந்து நடந்தாள் ராகவன் தலைவி 
(நான் என்றால் அது அவளும் நானும் - சூரியகாந்தி)

கிஷ்கிந்தா காண்டம்:
(ராமன் சுக்ரீவன், அனுமனைச் சந்தித்தது, வாலியை வதம் செய்தது)

அவர்களைச் சேர்க்க  அனுமான் பறந்தான்
('போடச்சொன்னால் போட்டுக்கறேன்' - பூவா தலையா)

சுந்தர காண்டம்:
(அனுமன் இலங்கை சென்று சீதையை
க் கண்டு வந்து ராமனிடம் சொல்லுதல்) 

ராமனை இடையிலே பிரிந்தவள் ஜானகி 
மீண்டும் நான் சேர்க்கிறேன் நான் ஒரு மாருதி 
('சொந்தங்களை வாழ்த்தி' - நிலவே மலரே)

யாரோ இவளோ ராமன் தேடிய சீதை 

('திருவளர்ச் செல்வியோ?' - ராமன் தேடிய சீதை) 

கணையாழி இங்கே, மணவாளன் அங்கே 
(கண்கள் இரண்டும்' - மன்னாதி மன்னன்)

யுத்த காண்டம்:

(போரில் ராவணனை வென்று, சீதையுடன் அயோத்தி திரும்பி மணிமகுடம் தரித்தல்)

வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வெற்றி என்று போர் முடிக்கு
ம் ஸ்ரீஜயராமன் 

அரசாள வந்த மன்னன் ராஜாராமன்
அலங்காரரூபன் அந்த சுந்தரராமன்


ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது ப்யம்?
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்


ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

குறிப்பு:  மேலே குறிப்பிட்ட பாடல்களில்,

'ஆண்மகன் வகுத்த எல்லையைக் கடந்து நடந்தாள் ராகவன் தலைவி' 
(நான் என்றால் அது அவளும் நானும் - சூரியகாந்தி), 

 'ஜானகிராமன் காட்டினில் திரிஞ்சான்
பாதியில்தானே சீதையைப்  பிரிஞ்சான் 
அவர்களைச் சேர்க்க  அனுமன் பறந்தான்'
('போடச் சொன்னால் போட்டுக்கறேன்'  - பூவா தலையா),

ராமனை இடையிலே பிரிந்தவள் ஜானகி 
மீண்டும் நான் சேர்க்கிறேன் நான் ஒரு மாருதி 

('சொந்தங்களை வாழ்த்தி' - நிலவே மலரே)

ஆகிய பாடல் வரிகளை எழுதியவர் வாலி. 

'ஜனகனின் மகளை' (ரோஜாவின் ராஜா) பாடலை எழுதியவர் புரட்சிதாசன்.

மற்ற பாடல்களை எழுதியவர் கண்ணதாசன்.

13. வரிகளுக்கு உயிர் ஊட்டும் வல்லமை படைத்தவர் எம் எஸ் வி

பாடல்களில் வரும் சொற்களுக்கு உயிரூட்டி, அவற்றை நடமாட விடுவது மெல்லிசை மன்னருக்குக் கை வந்த கலை. எம் எஸ் வியின் ஒவ்வொரு படலிலும் இதை நம்மால் உணர முடியும்.

சாதாரண சொற்களையே சிற்பமாக வடிப்பவர், இசை, நடனம் தொடர்பான வார்த்தைகள் வந்தால் அவற்றை விட்டு வைப்பாரா? நடனம் குறித்த வார்த்தைகளை அவர் எப்படி உயிர்ப்பித்திருக்கிறார் என்று நான் கவனித்து அனுபவித்த மூன்று இடங்களைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இது போல் பல உதாரணங்கள் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

1.உனக்கு மட்டும் உனக்கு மட்டும் (மணப்பந்தல்): 

இதில் இரண்டாவது சரணத்தில்,

'அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன்'
என்று ஒரு வரி வருகிறது. இந்த வரியைத் தொடர்ந்து ஒரு மென்மையான நாட்டிய இசையைப் புகுத்தியிருப்பார் மெல்லிசை மன்னர். 

மார்பில் நடனமாடுவது என்றால் நமக்கு ஒரு குழந்தை நம் மார்பின் மீது ஆடுவதுதான் நினைவுக்கு வரும். மார்பு மேடையாக இருக்கும்போது நடனம் மிக மென்மையானதாகத்தானே இருக்க வேண்டும்? அந்த மென்மையான இசையை இங்கே நாம் அனுபவிக்கலாம். 

இந்த இசையைக் கேட்கும்போதெல்லம் ஒரு சிறு குழந்தை தன் பிஞ்சுக் கால்களை உதைத்து  ஆடும் காட்சிதான் என் கண் முன் வரும்.

இந்தப் பாடலின் முதல் சரணத்தில் இதற்கு இணையான வரி ('கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே')யைத் தொடர்ந்து ஒரு ஹம்மிங் தான் வரும். எனவே நடனம் என்ற வார்த்தைக்காகத்தான் இத்தகைய பின்னணி இசையை மெல்லிசை மன்னர் பயன் படுத்தியிருக்கிறார் என்பது தெளிவு. உங்கள் உடனடி அனுபவத்துக்காகப் பாடலின் வலை இணைப்பை இங்கே கொடுத்திருக்கிறேன்.



2) என்ன பொருத்தம் (ரகசிய போலீஸ் 115): 

இதன் முதல் சரணத்தில்,
'நாட்டியம் ஆடட்டும் நாடகப் பாவை'
என்ற வரி வருகிறது.

இங்கே நாயகி நாயகன் மீது கோபமாக இருக்கிறாள் (நாயகியின் கோபமும், நாயகனின் கிண்டலான ரசிப்பும் பாடல் முழுவதுமே பின்னணி இசையிலும், பாடல் வரிகளின் உச்சரிப்பிலும் மிக அழகாகப் பின்னப்பட்டிருப்பது எம் எஸ் விக்கு மட்டுமே கை கூடக் கூடிய ஒரு அற்புதச் செயல்.) 

அவள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக நடன இசை அமைந்திருக்கிறது. நாட்டிய இலக்கணத்துக்கு இசைவான இசைதான். ஆனாலும் எதையோ போட்டு உடைப்பது போன்ற ஒரு ஆத்திரம் இதில் வெளிப்படுவதைக் கேட்பவர்கள் எளிதாக உணரலாம். 

'உனக்கு மட்டும்' பாடலில், மார்பின் மீது ஆடப்படும் நடனத்துக்கான மென்மையான இசைக்கு எதிர் விதமாக, மேடையே உடைந்து விடுமோ என்று அஞ்சத் தோன்றும் இசை இது.


3) ஆகாயம் காணாத சூர்யோதயம் (ஆலய தீபம்): 

இந்த அற்புதமான பாடலைப் பற்றித் தனியே ஒரு கட்டுரையே எழுதலாம். ஸ்ரீதருடன் இணைந்து எம்.எஸ்.வி பணியாற்றிய கடைசிப் படம் இது என்று நினைக்கிறேன்.

இதில் முதல் சரணத்தில்,

'தாலாட்டு உனக்காக நான் பாடினேன்
தாயன்பில் எனக்காக நீ பாடம்மா'

என்ற வரிகளைத் தொடர்ந்து, ஒரு சிறிய ஹம்மிங்கில் ஒரு தாலாட்டை அமைத்திருப்பார் எம் எஸ் வி. அது ஒரு அற்புதம்.

இரண்டாவது சரணத்தில்,

'இளங்கோவும் காணாத என் கண்ணகி
எழில் கொஞ்சும் ஆட்டத்தில் பொன் மாதவி'

என்று வரும்.

இந்த வரிகளைத் தொடர்ந்து, வெறும் சலங்கை ஓசையையும், தாளக் கருவிகளையும் வைத்து, சில வினாடிகளில் ஒரு மினி நாட்டியக் கச்சேரியையே நிகழ்த்தியிருக்கிறார் நம்மவர். மாதவி நடனத்துக்குப் பெயர் போனவள். கவிஞர் வேறு 'எழில் பொங்கும் ஆட்டம்' என்று எழுதி விட்டார். இந்த சந்தர்ப்பத்தை விட்டு விடுவாரா எம் எஸ் வி? அற்புதம்.

மூன்று பாடல்களுக்குமே வலை இணைப்பைக் கொடுத்திருக்கிறேன். காரணம். என்னால் என் அனுபவத்தை முழுமையாகச் சொற்களில் விளக்க முடியவில்லை. இதைப் படிப்பவர்கள் உடனே இந்தப் பாடல்களையும் கேட்டால், என்னால் விளக்க இயலாத நுணுக்கங்களையும் நன்றாகப் புரிந்து கொள்வார்கள் என்பதால்தான். நன்றி.


12. Dusting Gems

Some gems produced by MSV are getting dusted because they have not been taken out for a long time. We need to take them out, and dust them off at least now and then.

வெத்தல போட்ட பத்தினிப்பொண்ணு சுத்துது முன்னாலே
சொக்குது கண்ணு மெச்சுது பொண்ணு கட்டிக்க மாப்பிள்ளே!

This beautiful song is from Veera Thirumagan.This song is a chorus led by TMS. Strangely, this only song of TMS in this film had been overshadowed by PBS' stunning numbers 'Paadaaatha Paattellaam' and 'Roja Malare.'

This is a lovely song and makes singing it a pleasure. TMS sings this as if in a casual manner in keeping with the light sense of the song. The pallavi, charanams and the interludes including the 'laalaa laalaa laalaa laa' are just beautiful. I am not an expert in music appreciation and am unable to describe the nuances of the song. Suffice it to say that this is a listening pleasure.

My father had no special interest in film music but he would be attracted by certain songs when he happened to hear them on the radio and he would be singing those songs rather unconsciously. This song was one of his favorites. The humorous lyrics also should have amused him.

I also sometimes sing old film songs, often uncosciously. When my son was a child, he would immediately capture whatever I sang and would reproduce them instantly. My relatives have often enjoyed making him render some such songs during family functions.'Manithan enbavan deivam aagalaam' was one of his favorites. He was 2 years plus when my wife took him along in a bus. He was also tall and appeared older than he was in his childhood. The conductor had asked my wife to purchase a ticket for him and my wife had told him that the boy was only two years old. Soon after, my son started singing:

வெத்தல போட்ட பத்தினிப்பொண்ணு சுத்துது முன்னாலே
சொக்குது கண்ணு மெச்சுது பொண்ணு கட்டிக்க மாப்பிள்ளே!

Everyone had laughed hearing this.(Most of them would not have been familiar with this song!) But the conductor asked my wife:
பையனுக்கு ரென்டு வயசுதான்னு சொன்னீஙக ஆனா பையன் இந்தப் பாட்டெல்லாம் பாடுறானே!

In a way this song is connecting three generations of my family!


 பாடலைக் கேட்டு மகிழுங்கள்


11. A Whistling Tribute to MSV

 Reproduction of my posting in msvtimes.com/forum on Jan 26, 2009.


The Indian whistlers' Association presented a whistling tribute to the Living Legend MSV on Jan 25, 2009 at Chinmaya Heritage Centre, Chepet, Chennai.


Even as I was entering the hall,, the screen went up and I was stunned to see 17 year old Swetha whistling 'Saravana Poigaiyil' so beautifully and effortlessly. I did not expect girls to be among the whistlers but there were 5 of them performing on this day. There were others who did not perform that day but joined the chorus 'Sare Jahaan se achchaa' at the end paying tribute to our motherland on the eve of the Republic Day.

'Saravana poigaiyile' was the invocation song. After this Mr. Jagat, President of the Chennai chapter of Indian Whistlers' Association gave an introduction about their association and their activities. He said that recently a few hundred whistlers from all over India joined together to whistle Sara Jahaan se achcha, which would enter Limca Book of Records.

Mr. Jagat said that this was the first program of theirs by way of paying tribute to a living legend. So MSV becomes the first MD to be honoured by IWA (Indian Whistlers' Association). He set the tone for the program by whistling the pallavi of 'Vaazha ninanththaal vazhalaam' and asked the audience to see for themselves the difference between whistling with and without the orhestra. He also expressed his amazement how this song of 1962 isstill enjoyed today, after more than 40 years.

Mr. Ganesh was the compere and he did a good job by introducing the whistler for each song and highlighting his/her achievements.

If 17 year old Swetha surprised me, what can I say about Pooja, still younger (about 12 years, if my estimate is right) who followed her with 'Sittukkuruvi muththam koduththu'?

I give below the list of songs and the names of the whistlers. This is my own little way of recognizing these great performers.

1) Saravana poigaiyil Swetha

2) Sittukkuruvi muththam koduththu Pooja

3) NaaLaam NaLaam ThirunaLaam Rikvi ( or Rigvid, I couldn't get this name correctly) and Pavitra

4) Sonnathu neethaanaa? Shanmugarajan

5) Kaadhal Siragai Venkatraaman

6) AvaLukkenna AruN Kumaar and Pooja

7) Maalai Pzhudhin mayakkaththile Saran (He has performed carnatic music concerts by whistling)

8) Nenjaththai aLLi konjam thaa Venkatraman and Divyasundari

9) Ennai marandhadhen Nagarajan (This great whistler performed his whistling show during the reception of his daughter's marriage!)

10) Raajaavin Paarvai Shanmuga Rajan and Srikant

11) Naanoru Kuzhandhai Arun Kumar

12) KaN Pona Pokkile Bhadrinath

13) Poomaalaiyil oer malligai Nagarajan and Divyasundari

14) MayangugiraaL oru maadhu Vivitha

15) Thedinen Vandhadhu Pavitra

16) Kumari peNNin uLLththtile Arun Mumar and Swetha

17) Pon magaL VandhaaL Srikant

18) Neerodum Vaigaiyile Saran and Divyasundari

19) Unnai Ondru ketpen Sathyanarayanan

As far I am concerned, I was overwhelmed with a feeling of exhilaration and fullness. I never learnt to whistle. So, to me, it was a particularly astounding experience.

Everyone whistled exceedingly well. But I would like to mention Divyasundari, who whistled by blowing in, while most of the whistlers whistle by blowing out. This was her first performance.

Another girl Vivitha whistled through her teeth. So it looked as if she was just smiling, while she was whistling all along!

Arun Kumar mixed a bit of acting with his whistling to make his performance enjoyable. His singing of 'Kumari peNNin,' with an 'MGR getup' during which the other whistler Swetha also responded to his gestures particularly rocked the audience.

During the interval, IWA honoured Messers Ramki, Vaidhi and Vatsan of MSVtimes. This trio spoke about MSV and MSVtimes. Mr. Ramki on behalf of MSVtimes made a contribution to IWA and also to Mr.Patrick Pressoria whose team provided the orchestral support. With limited instruments, the orchestral team did a great job. Mr.Pressoria, though visually handicapped, proved to be a virtuoso in leading the orchestra and playing the keyboard. At the request of Mr. Vaidhi, he played 'Aththaan Ennaththaan' and 'Enna Enna Vaarthaigalo' on the Accordion. To the audience, this was a bonus. He also recalled his association with MSV and mentioned his greatness and humility.

IWA honoured Jagannathan, a boy of 16 who despite having lost his two hands and a leg due to an electric shock at a young age has created excellent paintings using his mouth to hold the brush and who also plays keyboard through his shortened arm.

Overall, it was a great show. There were a large number of youngsters among the audience. With these kinds of shows, there will be greater appreciation for MSV's divine creations by more and more people.

10. உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் - பாடல் வரிகள்

படம்: மணப்பந்தல் (1961)
கண்ணாதாசன் விஸ்வ‌நாதன் ‍ ராமமூர்த்தி

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே.
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா?
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா?
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)

வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் க‌ண்களினாலே.
பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே
பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன் ஆசையினாலே
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)

மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன்
கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்?
அந்தக் காலம் வரும் வந்தவுடன் உனக்கும் கூறுவேன்
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)

சிறு வயதிலேயே என்னை மிகவும் ஈர்த்த பாடல் இது. ஒரு குழந்தை அனைவைரையும் தன்னிடம் ஈர்ப்பது போல், இப்பாடலும் கேட்பவ‌ர் எல்லோரையும் உடனே ஈர்க்கும் வல்லமை (இனிமை) படைத்தது. இந்தப் பாட்டின் அழகே இதன் எளிமை தான். எளிமையான் பாடல் வரிகள், எளிமையான இசை. இந்தப் பாடலை யாருமே சுலபமாகப்ப் பாடி விடலாம். இந்த எளிமையே இந்தப் பாடலின் வலிமை என்று எனக்குத் தோன்றுகிறது.

 ஒரு இளம்பெண் ஒரு பொம்மையிடம் தன் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்தும் பாடல் இது..

இந்தப் பாடலின் வரிகளைக் கேட்கும்போது, வாலி சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது 

'என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்துப் போனாண்டி'
என்று வாலி எழுதியதை,
'போனவன் போனாண்டி'
என்று திருத்தித் தன் இசைக்கு ஏற்றபடி மாற்றியதுடன், பாடல் வரிகளுக்கும் அழகு சேர்த்தவர் மெல்லிசை மன்னர்.

இந்தப்பாட்டில் கூட முதலில் கவிஞர் 'உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்' என்று (மட்டும்) தான் எழுதி இருப்பாரோ? நம் ஆள்தான் அதை 'உனக்கு மட்டும் உனக்கு மட்டும்' என்று இரட்டிருத்திருபாரோ?' என்ற ஐயம் என் மனதில் எழுகிறது!

பல்லவியில் 'உனக்கு மட்டும் உனக்கு மட்டும்' என்று வருவது போல், முதல் சரணத்தில் வார்தைகள் இரு முறை வருவது அழகு. இரண்டாவது சரண‌த்தில் இதைத் தவிர்த்திருப்பது இன்னொரு அழகு. இரண்டாம் சரனத்திலும் வார்த்தைகள் இரு முறை வந்திருந்தால், கேட்பவற்குச் சற்றுச் சலிப்புத் தட்டியிருக்கக்க் கூடும்.

இந்த எளிய பாடலிலும் இலக்கிய நயத்தை உள்ளடக்க மறக்கவில்லை கவிஞர். காதலன் வாசலுக்கு வந்த பிற‌குதான் பூமுடித்துப் பொட்டு வைத்தாளாம் இந்த நங்கை. பொதுவாக, தலைவனுக்காகத் தலைவி, தலை சீவிப் பூ முடித்துப் பொட்டிட்டுக் காத்திருப்பதுதானே மரபு? ஆனால் இந்த நங்கை, தலைவனின் தலையைக் கண்ட பிற‌குதான் பூ முடித்துப் பொட்டு வைக்கிறாள் என்றால், என்ன காரணம்? முன்பே வைத்திருந்தால், பூ சற்றே வாடியிருக்கும், பொட்டு சற்றே கலைந்திருக்கும் என்ற அச்சத்தால் இருக்குமோ? தன் காதலனைப் புதுப் பொலிவு மாறாமல் எதிர் கொள்ள விழைகிறாள் போலும்!

முதல் சரண‌த்தின் இடையே ஒரு அழகான ஹம்மிங் வருகிறது. 'ஓஓஓஒஓஓ.......' என்று.
ஹம்மிங்கில் இவ்வளவு வகைகள் வேறு எந்த இசை அமைப்பாளராவது முயன்று பார்த்திருப்பாரா?

இரண்டாவது சரண‌த்தில், இதே ஹம்மிங் இசைக்கருவியில் இசைக்கப் படுகிறது.
'அவர் மார்பினிலே காலனமெல்லாம் நடனமாடுவேன்' என்ற வரிக்குப் பிறகு, ஒரு ரம்மியமான நடன இசையாக ஒலிக்கிறது
.'டண்டண்டண்டமண் டடடண்டண்.....'

ஒரு சிறு குழந்தை நம் மார்பில் குதிப்பது போன்ற இனிமையை வெ
ளிப்படுத்தும  இசை. (குழந்தைதானே மார்பில் நடன‌மாட முடியும்?) ஒரு வேளை, இந்த நடன இசையை இங்கே போட்ட பிற‌குதான், இதற்கு இணையாக முதல் சரணத்தில் ஹம்ங்கை அமைத்திருப்பாரோ?

ஆர்ப்பாட்டம் இல்லாத, ம‌னதை வருடிக் கொடுக்கும் இனிய பாடல்.

கைபேசியின் அழைப்பொலியாக வைத்துக் கொள்ள மிகவும் பொருத்தமான பாடல்!

குறிப்பு: நான் சொன்னது எதுவும் உஙள் யாருக்கும் தெரியாத ரகசியம் இல்லை என்பதை அறிவேன்!


 உனக்கு மட்டும் உனக்கு மட்டும்


9. MSV keeps the distance

I once listened to MD Deva's interview in a TV channel when he explained his experience of sharing his composition with MSV. MSV suggested one correction. The song had a word 'Angey (there).' MSV felt that the note for the song seemed to indicate 'ingey (here)' rather than 'angey,'and he also sugested how it could be changed. Deva sang both versions, as he had originally composed and as changed by MSV. I was stunned. The music speaks! I felt that MSV was possessed of Music. (இசை என்கிற பேய் அவரைப் பிடித்திருக்கிறது!)

I have observed his meticulous depiction of distance in a few songs, which I would like to share.I am sure many of you are already aware of this. My sharing is like a child sharing what it discovered with the parents, as if it is telling something to the parents which they don't know.(The parents,of course will pretend as if they are learning from the child!)

1) Adho andha paravai pola vaazha vendum
Idho indha alaigal pola aada vendum.
We can observe that 'adho' has a rising pitch (AarohaNam?) and 'idho 'a falling pitch (avarohaNam)

2) In pon ondru kaNden peNN angu illai, the first charanam ends with the line 'viNnodu viLaiyaadum peNN andha peNN allavo?

Listen to 'viNNodu'. The pitch goes up. After all the 'viNN' is so far above and the PeNN is on the earth!

Now contrast this with 'viNNodum mughilodum viLaiyadum veNNilave' Here all the words are in the same pitch. This is because, viNN, mughil and veNNilavu are all at the same level (not scientifically, but as is normally perceived by us)!

3) 'Bhoomiyil iruppathum vaanaththil parappadhum avaravar ennangaLe' (Shanthi Nilayam) Here a peculiar thing is Bhoomiyil is in high pitch and vaanaththil is in low pitch! This is because the person who sings this is flying! He is in the vaanam. So, vaanam is nearer to him and the earth is far off. We can write a lot on this song alone. This so excellently portrays a sense of flying. If we observe the interlude which has a humming and a floating orchestral flow, we can sense this. 

There could be (should be) several other examples like this.These few came to my mind. Some people may pooh-pooh this saying that this is all far-fetched (when I shared a subtle meaning of a line from Kamba Ramayanam with a friend of mine, he dismissed it saying that the poet might not have thought of this and these are things imagined by us!). Because these things are so meticulous, people will think that things just happened the way they are. But Deva's testimony will prove that MM has a mind so sharply tuned to music . MSV's music itself is created like a poetry with a lot of intricate constructions.

The man who keeps a close watch on 'matter' and 'meter' (MSV's favorite expressions to refer to the lyrics and the tune) will obviously measure the 'meters' (distance) also while composing. But 'keeping a distance' this way brings him closer to the hearts of the listeners.